சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,572-க்கு ஏலம்- ஒரே நாளில் ரூ.1,367 உயர்ந்தது


சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,572-க்கு ஏலம்- ஒரே நாளில் ரூ.1,367 உயர்ந்தது
x

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,572-க்கு ஏலம்- ஒரே நாளில் ரூ.1,367 உயர்ந்தது

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்து 572-க்கு ஏலம் போனது. ஒரே நாளில் ரூ.1,367 உயர்ந்தது.சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,572-க்கு ஏலம்- ஒரே நாளில் ரூ.1,367 உயர்ந்தது

பூக்கள் ஏலம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் ஒரு டன் பூக்களே கொண்டு வந்திருந்தார்கள்.

மல்லிகைப்பூ (கிலோ) ரூ.2,572-க்கும், முல்லை ரூ.1,400-க்கும், காக்கடா ரூ.1,200-க்கும், செண்டுமல்லி ரூ.75-க்கும், பட்டுப்பூ ரூ.75-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.320-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது.

விலை உயர்வு

இதேபோல் நேற்று முன்தினம் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,205-க்கும், முல்லை ரூ.1,080-க்கும், காக்கடா ரூ.925-க்கும், செண்டுமல்லி ரூ.66-க்கும், பட்டுப்பூ ரூ.120-க்கும், ஜாதிமல்லி ரூ.1,100-க்கும், கனகாம்பரம் ரூ.550-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.280-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது.

நேற்று முன்தினத்தை விட நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,367-ம், முல்லை ரூ.320-ம், காக்கடா ரூ.275-ம், செண்டுமல்லி ரூ.9-ம், பட்டுப்பூ ரூ.5-ம், கனகாம்பரம் ரூ.50-ம், சம்பங்கி ரூ.40-ம், அரளி ரூ.40-ம், துளசி ரூ.10-ம் உயர்ந்து விற்பனையானது. அதேபோல் ஜாதிமல்லி 100 ரூபாய் குறைந்து ஏலம் போனது.

பூ விலை உயர்வு குறித்து சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறும்போது, 'கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு மிக அதிகமாக இருப்பதால் பூக்கள் பூப்பதில்லை. அதனால் மார்க்கெட்டுக்கு குறைவான அளவே பூக்கள் வந்தன. ஆனால் வியாபாரிகளுக்கு அதிகம் தேவைப்பட்டதால் விலை அதிகமாக ஏலம் கூறி எடுத்துச் சென்றனர்' என்றனர்.



Next Story