கனகமுட்லுசன்னியாசி மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை


கனகமுட்லுசன்னியாசி மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை
x
தினத்தந்தி 29 Dec 2022 6:45 PM GMT (Updated: 29 Dec 2022 6:45 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அடுத்த கனகமுட்லு கிராமத்தில் உள்ள சன்னியாசி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 48-வது நாள் மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி மலையடிவாரத்தில் உள்ள காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர் பெண்கள் முளைப்பாரி மற்றும் பால்குடங்களை எடுத்து ஊர்வலமாக கொண்டு வந்து பட்டாளம்மன் கோவிலில் வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து கனகாம்பட்டில் உள்ள மண்டு மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்திவிட்டு பால் குடங்களோடு சன்னியாசி மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து மாரியம்மன், சன்னியாசி மாரியம்மன், விநாயகர் ஆகிய சாமிகளுக்கு பால் அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு சிறப்பு யாகமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story