நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்


நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
x

நெல்லை மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை கிராமப்புற மின் கோட்டத்துக்கு உட்பட்ட மூலைக்கரைப்பட்டி, வன்னிக்கோனேந்தல், கங்கைகொண்டான், கரந்தானேரி, மூன்றடைப்பு மற்றும் ரஸ்தா, பரப்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எனவே அங்கு இருந்து மின்வினியோகம் பெறும், மூலைக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைச்செல்வி, காடான்குளம், வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தடியம்பட்டி, பன்னீரூத்து, மேல இலந்தைகுளம், கண்ணாடிகுளம், மருக்காலங்குளம், தெற்கு பனவடலி, நரிக்குடி, சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, ஆளவந்தான்குளம், செழியநல்லூர், சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பானான்குளம், அம்பூர்ணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

அதே போல் மதவக்குறிச்சி, துலுக்கர்பட்டி, ரஸ்தா பட்டவர்த்தி, வெங்கலப்பொட்டல், கம்மாளன்குளம், சேதுராயன்புதூர், காவலர் குடியிருப்பு, பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவளைக்காரன்குளம், வில்லியனேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்பட்டி, பட்டர்புரம், மாவடி, முத்துலாபுரம், சித்தூர், சீயோன்மலை, கண்ணாத்திகுளம், தங்கயம் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை நெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் அலெக்சாண்டர் தெரிவித்து உள்ளார்.


Next Story