எரியோடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


எரியோடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

எரியோடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

எரியோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி எரியோடு, நாகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, பாகாநத்தம், குண்டாம்பட்டி, கோட்டைகட்டியூர், சவடகவுண்டன்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சனம்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி, சித்தூர், தொட்டணம்பட்டி, காமணம்பட்டி, அருப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை எரியோடு உதவி செயற்பொறியாளர் பஞ்சநதம் தெரிவித்துள்ளார்.


Next Story