மின்சாரம் நிறுத்தம்


மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:45 PM GMT)

மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆ.தெக்கூர், கீழச்சிவல்பட்டி மற்றும் எஸ்.புதூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மேற்கண்ட துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் ஆ.தெக்கூர், நெற்குப்பை, கண்டவரயன்பட்டி, காரையூர், கொண்ணத்தான்பட்டி, துவார், முறையூர், எஸ்.எஸ்.கோட்டை, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூர். கீழச்சிவல்பட்டி, விராமதி, இளையாத்தங்குடி, ஆவிணிப்பட்டி, கீரணிப்பட்டி, சிறுகூடல்பட்டி, நெடுமரம், எஸ்.புதூர், வாராப்பூர், மேலவண்ணாயிருப்பு, புழுதிப்பட்டி, கட்டுக்குடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை திருப்பத்தூர் துணை மின்நிலைய செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.


Next Story