பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை மின் தடை - மின்சார வாரியம் அறிவிப்பு


பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை மின் தடை - மின்சார வாரியம் அறிவிப்பு
x

பராமரிப்பு பணி காரணமாக தியாகராய நகரில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் கீழ்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

தியாகராய நகர்: சைதாப்பேட்டை, தாடண்டர் நகர், அண்ணாசாலை, ஜோதிமா நகர், அண்ணா நகர் தெரு, செட்டி தெரு, பஜார் சாலை, ஆலந்தூர் சாலை, சுப்பிரமணிய சாமி கோவில் தெரு, சுப்புபிள்ளை தோட்டம், பிள்ளையார் கோவில் தெரு, தர்மராஜா கோவில் தெரு.

ஐ.டி.காரிடர்: பெருங்குடி, துரைப்பாக்கம், வெங்கடேஷ்வரா நகர், செந்தில் நகர், மணிகோடி சீனிவாசன் நகர், பிரபு நகர், மாருதி நகர்.

பராமரிப்பு பணி முடிவடைந்ததும் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story