புனல்குளம், கோட்டைப்பட்டினம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


புனல்குளம், கோட்டைப்பட்டினம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x

புனல்குளம், கோட்டைப்பட்டினம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை புனல்குளம் தொகுப்பு துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி புனல்குளம், தெத்துவாசல்பட்டி, மஞ்சப்பேட்டை, தச்சங்குறிச்சி, விராலிப்பட்டி, நத்தமாடிப்பட்டி, சோழகம்பட்டி, நொடியூர், கோமாபுரம், சமுத்திரப்பட்டி, கொத்தம்பட்டி, அரியாணிப்பட்டி, காடவராயன்பட்டி, புதுநகர், முதுகுளம் ஆகிய பகுதிகளுக்கும் குளத்தூர் நாயக்கர்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் குளத்தூர் நாயக்கர்பட்டி, நடுப்பட்டி, சேவியர்குடிகாடு, ஆத்தங்கரைப்பட்டி, சாமிப்பட்டி, கீராத்தூர், பருக்கைவிடுதி, குளத்தூர், மூக்கப்புடையான்பள்ளம் அகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை புனல்குளம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கோட்டைப்பட்டினம், மீமிசல், கட்டுமாவடி, ஆவுடையார்கோவில், கரூர், சுப்பிரமணியபுரம், அரசர்குளம், திருப்புனவாசல், அமரடக்கி, அம்பலவாநேந்தல், வல்லவாரி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என அறந்தாங்கி உதவி செயற்பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story