விருத்தாசலம்விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


விருத்தாசலம்விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 21 Dec 2022 6:45 PM GMT (Updated: 21 Dec 2022 6:47 PM GMT)

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.தொடர்ந்து, மாலை 4 மணிக்கு மேல் நூறு கால் மண்டபத்தில் உள்ள பிரம்மாண்ட நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று, முதனை முதுகுன்றீஸ்வரர், பாலக்கொல்லை அழகேஸ்வரர், தேவஸ்தான கோபுராபுரம் ஆதிசக்தி ஈஸ்வரர், புலியூர் வீரசேகரர், தர்மநல்லூர் தர்மபுரீஸ்வரர், ராஜேந்திரப்பட்டினம் நீலகண்டேஸ்வரர் மற்றும் காவனூர், ஆலடி, சத்தியவாடி, கார்மாங்குடி, வடக்கு வெள்ளூர், மு.பரூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அமைந்துள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது.


Next Story