சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்- விளந்தை அறம்வளர்த்த நாயகி தர்மசம்வர்த்தினி மேல அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷத்தையொட்டி பால், தயிர், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆண்டிமடம்-விளந்தை உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் திருக்களப்பூர் திருக்கோடிவனத்தீசுவர், விளந்தை அழகு சுப்பிரமணியர், கூவத்தூர் விஸ்வநாதர், அழகாபுரம் அழகாபுரீஸ்வரர், பெரிய கிருஷ்ணாபுரம் படைவெட்டி மாரியம்மன் கோவிலில் உள்ள திருநீலகண்டேஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


Next Story