சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

பிரதோஷத்தைெயாட்டி சிவன் கோவில்களில் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

பிரதோஷத்தைெயாட்டி சிவன் கோவில்களில் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சதுரகிரி கோவில்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். காலை 7 மணிக்கு கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்வதற்காக நடந்து சென்றனர்.

பிரதோஷத்தையொட்டி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவில் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லாததால் சாமி தரிசனம் செய்து முடித்தவுடன் உடனடியாக தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டுமென வனத்துறையினர் பக்தர்களுக்கு அறிவுறுத்தினர்.மேலும் பிரதோஷ வழிபாட்டிற்கான சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

அருணாச்சலேஸ்வரர் கோவில்

இதை போல் ராஜபாளையம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களிலும் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. ராஜபாளையம் பகுதியில் உள்ள சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மாயூரநாத சுவாமி கோவில், கருப்ப ஞானியார் கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில், குருசாமி கோவில், பறவை அன்னம் காத்தருளிய சாமி கோவில், மதுரை சாலையில் உள்ள தாரண்யா நந்தீஸ்வரர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது.

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் தவநந்தி கண்டீஸ்வரர் கோவில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில், வாழவந்தாள்புரம் கிராமத்தில் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில், தெற்கு வெங்கநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோவில், அயன் கொல்லம் கொண்டான் வீரபாண்டீஸ்வரர் கோவில், இளந்திரை கொண்டான் காலா ஹஸ்தீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story