கோபி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


கோபி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 1 Jun 2023 9:06 PM GMT (Updated: 2 Jun 2023 10:16 AM GMT)

கோபி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்ற்து

ஈரோடு

கோபி

கோபி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் உள்ள மரகதீஸ்வரர் கோவிலில் நந்திக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் ரிஷப வாகனத்துடன் பக்தர்கள் கோவிலை சுற்றி வலம் வந்தனர். மேலும் கோபி அருகே உள்ள காசிபாளையம் காசி விஸ்வநாதர் கோவில், கோபி மொடச்சூர் சோமேஸ்வரர் கோவில், பாரியூர் அமர பணீஸ்வரர் கோவில், கோபி விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவில், பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில் உள்ள கைலாசநாதர், குள்ளம்பாளையம் ஈஸ்வரன் கோவில், அருள்மலை முருகன் கோவிலில் உள்ள காசி விஸ்வநாதர், கோபி திருநகர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோபி மாதேசியப்பன் வீதியில் அமைந்துள்ள மாதேஸ்வரர் கோவில், கூகலூரில் உள்ள மீனாட்சி, அம்பிகா சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

அம்மாபேட்டை

கோபி அக்ரஹாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ரிஷப வாகனத்தில் விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், கோவிலின் உள்பிரகாரத்தில் வீதி உலா வந்தார். இதேபோல் அம்மாபேட்டை காவிரிக்கரையில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சாமி அருள்பாலித்தார். இதில் அந்த பகுதிைய சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி உற்சவ மூர்த்தியான நாகேஸ்வரர் மற்றும் அம்மனுக்கு பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நாகேஸ்வரர், அம்மன் ஆகியோர் ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். இதேபோல் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவில், கொந்தளம் நாகேஸ்வர சாமி கோவில், பழனிக்கவுண்டம்பாளையம் பழனியாண்டவர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடைெபற்றது.


Related Tags :
Next Story