'தமிழக மேம்பாட்டுக்கு பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்' எல்.முருகன் பேட்டி


தமிழக மேம்பாட்டுக்கு பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் எல்.முருகன் பேட்டி
x

‘‘தமிழக மேம்பாட்டுக்கு பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்’’ என்று மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.

நெல்லை,

நெல்லையில் இருந்து சென்னை செல்ல வேண்டுமானால் ஒரு நாளாகி விடும். அந்த நிலை இப்போது மாறியுள்ளது.

'வந்தே பாரத்' ரெயிலானது முற்றிலும் உள்நாட்டிலேயே அதாவது சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி ரெயில்வே துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலும் ரெயில்வே துறையில் தமிழகத்திற்கு ரூ.800 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் தமிழகத்திற்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக மேம்பாட்டுக்கு...

இது தவிர ராமேசுவரம், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, சென்னை ரெயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இந்த ஆண்டு 9 புதிய ரெயில் தடங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தமிழக மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

'வந்தே பாரத்' ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வந்து சேரும். அது தொடர்பாக ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story