ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்


ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
x

ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

ராணிப்பேட்டை

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமைகளில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

அதன் அடிப்படையில் 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. முகாமில் 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பி.இ. படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story