பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் வி.வி.வி. பெண்கள் கல்லூரியில் உயிர் வேதியியல் துறையின் சார்பில் பயோ கெமிக்கா-2023 என்ற தலைப்பில் கல்லூரிகளுக்கு இடையேயான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. கல்லூரி அளவில் 12 போட்டிகள் நடத்தப்பட்டு 7 கல்லூரிகளில் இருந்து 230 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி முதல் இடம் பெற்றது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி கூட்டுச் செயலாளர் லதா, டாக்டர் அதிர்ஷ்ட குமாரி ஆகியோர் பரிசு வழங்கினர்.


Related Tags :
Next Story