பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்
சீர்காழி அருகே பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடந்தது
மயிலாடுதுறை
சீர்காழி
சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டில், 108 திவ்ய தேசங்களில் 28-வது தலமான திருவிக்கிரம நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 10 நாட்கள் உற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது நாள் கருடசேவை உற்சவம் நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று தங்க கருட வாகனத்தில் தாடாளன் பெருமாள் என்கிற திருவிக்ரம நாராயணப்பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story