மக்கள் சந்திப்பு பிரசார கூட்டம்


மக்கள் சந்திப்பு பிரசார கூட்டம்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார கூட்டம் நடந்தது

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலமரத்தடி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார கூட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் நாகை மாலி எம்.எல்.ஏ. பேசினார். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனே வழங்க வேண்டும். பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வினை திரும்ப பெற வேண்டும். அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு ஆள் எடுப்பதை கைவிட வேண்டும். புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் கல்வியை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மக்கள் சந்திப்பு பிரசார கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் லெனின், கஸ்தூரி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி, ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாலு, ஒன்றிய தலைவர் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்று கடை, கடையாகவும், வீடு-வீடாகவும் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.


Next Story