புஞ்சைபுளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி


புஞ்சைபுளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி
x

புஞ்சைபுளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி:

புஞ்சைபுளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

புனித அந்தோணியார் ஆலயம்

புஞ்சைபுளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் நடந்த திருப்பலிக்கு கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்டனிஸ் தலைமை தாங்கினார். இதில் புஞ்சைபுளியம்பட்டி, வாலிபாளையம் லூர்துபுரம் பவானிசாகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

தேர் பவனி

பின்னர் இரவில் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நடந்தது. அப்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார், உயிர்த்த இயேசு சொரூபங்கள் வைக்கப்பட்டது. ஆலயத்தில் தொடங்கிய இந்த தேர் பவனியானது சத்தி மெயின் ரோடு, மாதம்பாளையம் ரோடு, மறைமலையடிகள் வீதி, சுல்தான் சாலை வழியாக மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது.

நேற்று காலை 8 மணி அளவில் இறை வழிபாடு நடந்தது. இதில் ஈரோடு மறைவட்ட முதன்மை குரு ஜான் சேவியர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கினார். இதையொட்டி ஆலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


Related Tags :
Next Story