புங்கினிப்பட்டி செட்டிகுளத்தில் மீன்பிடி திருவிழா


புங்கினிப்பட்டி செட்டிகுளத்தில் மீன்பிடி திருவிழா
x

இலுப்பூர் அருகே புங்கினிப்பட்டி செட்டிகுளத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது.

புதுக்கோட்டை

மீன்பிடி திருவிழா

இலுப்பூர் அருகே உள்ள புங்கினிப்பட்டி செட்டிகுளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து குளம் நிறைந்து அமோக விளைச்சல் வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுதல். இந்தநிலையில் குளத்தில் நீர் வற்றி குறைந்தவுடன் குளத்தில் இருக்கும் மீன்களை கிராமமக்கள் சேர்ந்து பிடித்து திருவிழாவாக கொண்டாடி மகிழ்வதும் வழக்கம்.

இதனையடுத்து இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா இன்று நடந்தது. முன்னதாக ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டை எடுத்து வீசிய உடன், குளத்து கரையில் கூடியிருக்கும் திரளான பொதுமக்கள் தங்கள் கொண்டுவந்த கச்சா, தூரி, வலை உள்ளிட்டவற்றை கண்மாயில் வீசி மீன்பிடித்தனர்.

சமைத்து சாப்பிட்டனர்

இதில் நாட்டுவகை மீன்களான கெழுத்தி, குரவை, ஜிலேபி, அயிரை, கட்லா, கெண்டை கெளுத்தி, விரால் ஆகிய மீன்கள் பொதுமக்களுக்கு கிடைத்தன. பின்னர் தங்களுக்கு கிடைத்த மீன்களை பொதுமக்கள் வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்


Next Story