பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்


பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
x

பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது.

அரியலூர்

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் கோவிலில் நேற்று கிரிவலம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று மாலை கணக்க விநாயகர் கோவிலில் சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பவுர்ணமி கிரிவலம் தொடங்கி நடைபெற்றது. கோவிலில் தொடங்கிய கிரிவலம் வன்னியர்குழி, கணக்க விநாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் பிரகதீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. இரவில் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. கிரிவலத்தில் சுற்று வட்டார கிராம மக்கள், சிவனடியார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story