நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் லேசான மழைக்கு வாய்ப்பு-ஆராய்ச்சி நிலையம் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் லேசான மழைக்கு வாய்ப்பு-ஆராய்ச்சி நிலையம் தகவல்
x

நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் நாளை மறுநாள் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

நாமக்கல்

வானிலை

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாளையும், 5-ந் தேதியும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 3 மில்லி மீட்டரும், 4-ந் தேதி (திங்கட்கிழமை) 2 மில்லி மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை முதல் 4 நாட்களுக்கு மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில், தென் மேற்கு திசையில் இருந்து காற்று வீசும்.

அதேபோல் வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். இதனிடையே காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 65 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 45 சதவீதமாகவும் இருக்கும்.

லேசான மழை

சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழல் அயற்சியால் பாதிக்கப்பட்டு இறந்தது, கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது. எனவே பண்ணையாளர்கள் தகுந்த உயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். அதேபோல் தீவனத்தில் வைட்டமின் ஈ மற்றும் செலினியம் நுண்ணூட்ட சத்துக்களை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story