ராஜா தேசிங்கு, ராணிபாய் கல்லறை வரலாற்று சின்னத்தை பாதுகாக்க வேண்டும் அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை
ராஜா தேசிங்கு, ராணிபாய் கல்லறை வரலாற்று சின்னத்தை பாதுகாக்க வேண்டும் அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் நடந்த விழாவில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
ராணிப்பேட்டை, வரலாறு படைத்த பூமி. செஞ்சி கோட்டை வீரன் வீழ்த்தப்பட்ட பிறகு இந்த மண்ணில் தான் புதைக்கப்பட்டார். அவர் இறந்தார் என கேள்விப்பட்டு அவரது மனைவி தீக்குளித்து இறந்தார். ராஜா தேசிங்கு, ராணிபாய் இருவரது உடலும் இங்கு புதைக்கப்பட்டிருக்கிறது. அந்த வரலாற்று இடத்தை பார்க்கலாம் என்றால் வசதி இல்லை. எல்லாவற்றையும் செய்யும் முதல்-அமைச்சர் இந்த வரலாற்று சின்னத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story