உலக அலையாத்திக்காடுகள் தின ஊர்வலம்


உலக அலையாத்திக்காடுகள் தின ஊர்வலம்
x

உலக அலையாத்திக்காடுகள் தின ஊர்வலம் நடந்தது.

திருவாரூர்

முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வனத்துறை சார்பில் உலக அலையாத்திக்காடுகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது. இதற்கு வனச்சரக அலுவலர் ஜனனி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அமுதராசு, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து அலையாத்திகாடுகள் தின ஊர்வலம் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு புதிய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் வனவர் முருகானந்தம், வனக்காப்பாளர்கள் சிவநேசன், கணேசன், சகிலா, பூபதி, அபிராமி, வன காவலர்கள் பாரதி, கேசவன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story