ஏரி மதகு மீண்டும் உடைப்பு


ஏரி மதகு மீண்டும் உடைப்பு
x

மருதாடு கிராமத்தில் ஏரி மதகு மீண்டும் உடைப்பு

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே மருதாடு கிராமத்தில் மாவட்டத்திலேயே 2-வது மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஏரியின் மதகை மர்ம நபர்கள் சிலர் மீன் பிடிப்பதற்காக உடைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் மூழ்கி பயிர்கள் நாசமானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகில் இருந்து வெளியேறும் தண்ணீரை சரியான முறையில் சீரமைப்பு செய்யாததால். நேற்று இரவு மீண்டும் ஏரியின் மதகு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.

இதனால் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதம் அடைந்தது.

கோடை காலங்களில் தண்ணீர் கிடைக்காத நிலையில் தற்போது ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி வருவதால் எதிர்காலங்களில் விவசாயிகளுக்கும், நிலத்தடி நீர் ஆதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுத்து ஏரியின் மதகை சீர் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.‌


Next Story