ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:47 PM GMT)

கடையநல்லூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

கடையநல்லூர்:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நேற்று 2-வது நாளாக சிறுவிடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.


Next Story