முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தோப்பில் சந்தனமரம் திருட்டு


முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தோப்பில் சந்தனமரம் திருட்டு
x

முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தோப்பில் சந்தனமரம் திருட்டு

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே உள்ள கீழ கபிஸ்தலம் சான்றோர் தோப்பு தெருவில் வசிப்பவர் எத்தையன்(வயது66). விவசாயி. முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான இவருக்கு சொந்தமான தோப்பு கும்பகோணம்- திருவையாறு சாலையில் ராமானுஜபுரம் பகுதியில் உள்ளது. இந்த தோப்பில் 10-க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் இருந்தன. நேற்று இரவு மர்ம நபர்கள் ஒரு சந்தன மரத்தை வெட்டி எடுத்து சென்றுவிட்டனர். இதுகுறித்து எத்தையன் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சந்தன மரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story