பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை


பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை
x

உடல்நலக்குறைவால் அவதியடைந்த பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

உடல் நலக்குறைவு

அரியலூர் மாவட்டம் மேல கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவருடைய மகள் உமா (வயது 13). இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் உமாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த 4-ந் தேதி பொய்யூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி சாவு

உடல்நலக்குறைவால் அவதியடைந்த உமா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அப்பகுதி மக்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உமா பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story