செல்போன் வாங்கி தராததால் பள்ளி மாணவர் தற்கொலை


செல்போன் வாங்கி தராததால் பள்ளி மாணவர் தற்கொலை
x

செல்போன் வாங்கி தராததால் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

திருமயம்:

தூக்கில் தொங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மான்குறிச்சிபட்டியை சேர்ந்தவர் முத்துமுருகன். இவரது மகன் சூர்யா(வயது 17). இவர் நற்சாந்துபட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இதற்கிடையே சூர்யா, தனது தந்தையிடம் புதிதாக செல்போன் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் தற்போது படிப்பில் கவனம் செலுத்தும்படியும், படித்து முடித்தபிறகு செல்போன் வாங்கி தருவதாகவும் சூர்யாவிடம் முத்துமுருகன் கூறியதாக தெரிகிறது.இதனால் மனவேதனை அடைந்த சூர்யா கடந்த 22-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது மின்விசிறி கொக்கியில் வயரால் தூக்குப்போட்டு தொங்கினார்.

சாவு

இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்துமுருகன் பனையப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ெசல்போன் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story