பள்ளி ஆசிரியர் விபத்தில் பலி


பள்ளி ஆசிரியர் விபத்தில் பலி
x

பள்ளி ஆசிரியர் விபத்தில் பலியானார்.

புதுக்கோட்டை

அறந்தாங்கி எல்.என்.புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 42). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் உறவினர் வீட்டில் துக்கம் விசாரித்து விட்டு அறந்தாங்கி ஒத்தக்கடை அருகே மோட்டார் சைக்கிளில் மாரியப்பன் சென்று கொண்டு இருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்று சாலையோர புளிய மரத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்ட அறந்தாங்கி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story