பெண்ணுக்கு அரிவாள் வெட்டு


பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
x

சொத்து தகராறு காரணமாக பெண்ணை அரிவாளால் வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே அனுப்பப்பட்டியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 42). கூலித் தொழிலாளி. இவரது சகோதரர் பிளவேந்திரன் (45). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பிரான்சிஸ், அவரது மனைவி கிறிஸ்டோ மேரி (40) ஆகியோருடன் பிளவேந்திரன் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது ஆத்திரமடைந்த பிளவேந்திரன் அரிவாளால் கிறிஸ்டோமேரியை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story