பாம்பனில் கடல் உள்வாங்கியது


பாம்பனில் கடல் உள்வாங்கியது
x

பாம்பனில் கடல் உள்வாங்கியது

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம், பாம்பன், ஏர்வாடி, வாலிநோக்கம், தொண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கடலோர பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன், கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.

தொடர்ந்து வீசி வரும் பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, ஏர்வாடி, வாலிநோக்கம், தொண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் 8-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் 4 ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகு, நாட்டுபடகு மற்றும் பைபர் படகுகள் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் பாம்பன் தென்கடல் பகுதியில் நேற்று காலை முதலே வழக்கத்திற்கு மாறாக கடல் பல அடி தூரத்திற்கு உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலில் உள்ள பாறை மற்றும் பாசிகள் அனைத்தும் தெளிவாக வெளியே தெரிந்தன. இது பற்றி மீனவர்கள் கூறும்போது. இதுபோன்று காற்று வீசும் சீசனில் கடல் உள்வாங்குவதும், சகஜ நிலைக்கு திரும்புவதும் இயல்பான ஒன்று என்று தெரிவித்தனர்.


Related Tags :
Next Story