அரிச்சல்முனையை ரசிக்க மீண்டும் உருவான மணல் பரப்பு


அரிச்சல்முனையை ரசிக்க மீண்டும் உருவான மணல் பரப்பு
x

இயற்கையின் ஜாலத்தால் கடல் நீர் உள்வாங்கி தனுஷ்கோடி அரிச்சல்முனையில் மீண்டும் மணல் பரப்பு உருவாகி உள்ளது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இயற்கையின் ஜாலத்தால் கடல் நீர் உள்வாங்கி தனுஷ்கோடி அரிச்சல்முனையில் மீண்டும் மணல் பரப்பு உருவாகி உள்ளது.

அரிச்சல்முனை

ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி கடல் பகுதி இயற்கையாகவே கடல் நீரோட்டம் மற்றும் கடல் சீற்றம் உள்ள பகுதியாகும்..

அங்கு அரிச்சல்முனை கடற்கரை சாலை வளைவை சுற்றியுள்ள கடலில் அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்கின்றன.

அந்த சாலை திறக்கப்பட்டபோது அரிச்சல் முனை சாலை வளைவை சுற்றி இருபுறமும் சில கிலோமீட்டர் தூரத்திற்கு கடல்நீர் இல்லாமல் மணல் பரப்பாக காட்சி அளித்தது.

மீண்டும் மணல் பரப்பு

அடுத்த சில வருடங்களில் இந்த மணல் பரப்பு முழுவதும் கடலாக மாறியது. இதனால் தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் அரிச்சல் முனை சாலை வளைவில் நின்றுகொண்டு, கடல் பகுதியை பார்த்து ரசித்து சென்றனர். இந்த நிலையில் தனுஷ்கோடி அரிச்சல் முனை சாலை வளைவைச் சுற்றி சூழ்ந்திருந்த கடல்நீர் தற்போது உள்வாங்கிக் கொண்டே செல்கிறது.

இதனால் மீண்டும் மணல் பரப்பு உருவாகி உள்ளது. குறிப்பாக தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் குறிப்பிட்ட தூரம் வரை இந்த மணல் பரப்பு உருவாகி உள்ளது. எனவே அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மீண்டும் மணல் பரப்பில் இறங்கி நின்று, கடல் மற்றும் கடற்கரை அழகை ரசித்து செல்கின்றனர்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் இதுபோன்று இயற்கை அடிக்கடி ஜாலங்கள் காட்டுவதாக சுற்றுலா பயணிகள் வியப்புடன் கூறுகின்றனர்.


Related Tags :
Next Story