புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு 'சீல்' வைப்பு


தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:46 PM GMT)

ஏரல் அருகே புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அருகே உள்ள கொற்கை மணலூரை சேர்ந்தவர் பிச்சமுத்து மகன் வேல் உடையார் (வயது 31). இவர் கொற்கை சந்தியாகப்பர் கோவில் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த நிலையில் இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக ஏரல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா மற்றும் போலீசார் இவரது கடையை சோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 195 பாக்கெட்டுகள் இருந்தது. உடனே வேல் உடையாரை கைது செய்தனர். மேலும் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி காளிமுத்து மற்றும் ஏரல் போலீசார் அந்த மளிகை கடைக்கு 'சீல்' வைத்தனர்.


Next Story