கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மின்சாரம் தாக்கி பலி


கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மின்சாரம் தாக்கி பலி
x

மேல்பாடி அருகே தொடக்க மத்திய வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

வேலூர்

மேல்பாடி

மேல்பாடி அருகே தொடக்க மத்திய வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

கூட்டுறவு கடன் சங்க செயலாளர்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடியை அடுத்த சின்ன கீசகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 57). இவர் மேல்பாடி மத்திய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளராக பணிபுரிந்து வந்தார். மேலும் இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த 2 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை நிலத்தில் பயிரிட்டுள்ள வேர்க்கடலை செடிகளுக்கு களைக்கொல்லி மருந்தினை தெளிக்க சென்றார்.

மின்சாரம் தாக்கி பலி

அப்போது களைக்கொல்லி மருந்தினை தண்ணீருடன் கலப்பதற்காக மின் மோட்டாரின் சுவிட்சை ஆன் செய்யும் போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைகண்ட அக்கம்பக்கத்தினர் அவருடைய உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். உறவினர்கள் விரைந்து வந்து அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர்.

இச்சம்பவம் குறித்து மேல்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story