அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்
x

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கடலூர்

அண்ணாமலைநகர்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் கட்டிடவியல் பொறியியல் சங்கம் சார்பில் தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கம் நடந்தது. இதற்கு பொறியியல் புல முதல்வர் பேராசிரியர் முருகப்பன் தலைமை தாங்கினார். இதில் துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் விழா மலரை வெளியிட்டு பேசினார். முன்னதாக கட்டிடவியல் துறை தலைவர் பேராசிரியர் பூங்கோதை வரவேற்றார். மாணவர் தலைவர் கோகுல்நாத் ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல முன்னாள் மாணவரும், சென்னை தனியார் நிறுவன நிர்வாக இயக்குனருமான பொறியாளர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் கட்டுமான துறைத்தலைவர் விடிவெள்ளி, பேராசிரியர்கள் அருட்செல்வன், நேருகுமார், மணிக்குமாரி, ராஜேந்திரன், பாலகுமார், ஞானகுமார், மாணவர் செயலாளர் கவிமலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் தேசிய அளவில் 33 மாணவ, மாணவிகள் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், ஏழிசை வல்லபி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story