இணைய பயன்பாடுகள் குறித்த கருத்தரங்கம்


இணைய பயன்பாடுகள் குறித்த கருத்தரங்கம்
x
தினத்தந்தி 19 Feb 2023 6:45 PM GMT (Updated: 19 Feb 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறை அரசு பெண்கள் கல்லூரியில் இணைய பயன்பாடுகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் கணினி அறிவியல் துறையின் தொழில்நுட்ப இடைமுகச் சங்கம் சார்பில் இணையத்தின் பயன்பாடு குறித்த கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மங்கையர்க்கரசி தொடங்கி வைத்தார். தொழில்நுட்ப இடைமுக சங்க ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்ச்செல்வி வரவேற்றார். உதவிப் பேராசிரியர்கள் வசந்தி, சுந்தரமூர்த்தி ஆகியோர் பேசினர். இதில் இறுதி ஆண்டு படிக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை உதவிப் பேராசிரியர் ராஜா தொகுத்து வழங்கினார். முடிவில் மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி சௌந்தர்யா நன்றி கூறினார்.


Next Story