மக்கள் நீதிமன்றத்தில் 60 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 60 வழக்குகளுக்கு தீர்வு
x

மக்கள் நீதிமன்றத்தில் 60 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ நிறுவனம்) கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்க சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையின் அடிப்படையில் உரிய உரிமையாளர்களிடம் நிலப்பட்டா வழங்க, ஜெயங்கொண்டத்தில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூலம் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட அமர்வு நீதிபதியும், சட்டப்பணிகள் குழு தலைவருமான மகாலட்சுமி தொடங்கி வைத்தார். இதில் 60 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதி மன்றத்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்று ஜெயங்கொண்டம் தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) வேலுமணி கூறினார். மேலும் மக்கள் நீதிமன்றம் மூலம் அந்தந்த பகுதியின் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றார்.

முகாமில் ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான லதா முன்னிலையில் அரசு வக்கீல்கள் மோகன் ராஜ், செந்தில்குமார் மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story