மக்கள் நீதிமன்றத்தில் 61 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 61 வழக்குகளுக்கு தீர்வு
x

மக்கள் நீதிமன்றத்தில் 61 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நீதிபதிகள் ஏக்னஸ் ஜெபகிருபா, செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். இதில் குற்ற வழக்குகள் 54 மற்றும் உரிமையியல் வழக்குகள் 7 ஆகியவற்றுக்கு வழக்காடிகளின் சமரசத்தின் அடிப்படையில் தீர்வு காணப்பட்டது. இது போன்று மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் திரளான வழக்காடிகளும், வக்கீல்களும் கலந்து கொண்டார்கள்.


Next Story