திருக்கோவிலூர் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு


திருக்கோவிலூர் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு
x
தினத்தந்தி 4 Jan 2023 6:45 PM GMT (Updated: 4 Jan 2023 6:47 PM GMT)

திருக்கோவிலூர் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிாிழந்தாா்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர்(வயது 67). இவர் கண்டாச்சிபுரம் மெயின் ரோட்டில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி பாஞ்சாலை (64). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

சேகர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு துணையாக பாஞ்சாலை உடனிருந்து கவனித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மருத்துவமனையில் பாஞ்சாலை தவறி விழுந்து காயமடைந்தார். இதனால் அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேகர் நேற்று காலை 7 மணி அளவில் இறந்து போனார்.

மனைவியும் சாவு

இதையடுத்து சேகரின் உடலை அடக்கம் செய்ய வேண்டி அவரது மகன்கள் கண்டாச்சிபுரத்திற்கு எடுத்து வந்தனர். இதற்கிடையே சேகர் இறந்த செய்தியை அவருடைய மனைவி பாஞ்சாலையிடம் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதை கேட்ட அவர் அதிர்ச்சியில் உறைந்து அடுத்த நிமிடமே அவரும் உயிரிழந்தார்.

கணவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மனைவியும் இறந்த சம்பவம் கண்டாச்சிபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story