பட்டுக்கோட்டை பகுதியில் 6-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்


பட்டுக்கோட்டை பகுதியில் 6-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 3 Jun 2023 7:15 PM GMT (Updated: 3 Jun 2023 7:15 PM GMT)

பட்டுக்கோட்டை பகுதியில் 6-ந் தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பட்டுக்கோட்டை புறநகர் உதவி செயற்பொறியாளர் மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- பட்டுக்கோட்டை துணை மின் நிலையத்தில் பருவ கால பராமரிப்பு பணிகள் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழப்பாளையம், எம்.என்.தோட்டம், மேலத்தெரு, லெட்சத்தோப்பு, நியூ ஹவுசிங் யூனிட், அதம்பை, குடிநீர், ஆத்திக்கோட்டை, சூரப்பள்ளம், வீரக்குறிச்சி, குறிச்சி மற்றும் பாளமுத்தி மின் பாதைகளுக்கு மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story