பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது


பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது
x

தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,332 கிலோ பட்டுக்கூடு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதனிடையே நேற்று பட்டுக்கூடுகள் வரத்து 148 கிலோவாக சரிந்தது. நேற்று ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.700-க்கும், குறைந்தபட்சமாக ரூ.520-க்கும், சராசரியாக ரூ.638.71-க்கும் பட்டுக்கூடுகள் விற்பனையானது. மொத்தம் ரூ.94 ஆயிரத்து 848-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை ஆனது.


Next Story