ரூ.5½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை


ரூ.5½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
x

தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.5½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை நடைபெற்றது.

தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு நேற்று பட்டுக்கூடுகள் வரத்து வழக்கத்தை விட குறைந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 947 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று முன்தினம் அதிகபட்சமாக ரூ.650-க்கு விற்பனையான பட்டுக்கூடு விலை நேற்று ஒரு கிலோவிற்கு ரூ.35 குறைந்தது. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.615-க்கும், குறைந்தபட்சமாக ரூ.475-க்கும், சராசரியாக ரூ.584.99-க்கும்விற்பனையானது. மொத்தம் ரூ.5 லட்சத்து 54 ஆயிரத்து 397 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டன.


Next Story