ரூ.14 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை


ரூ.14 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
x

தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.14 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 2,330 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று முன்தினம் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.710-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.25 விலை உயர்ந்தது. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.735- க்கும், குறைந்தபட்சமாக ரூ.375-க்கும், சராசரியாக ரூ.596.68-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.13 லட்சத்து 90 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.


Next Story