ரூ.19¼ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை


ரூ.19¼ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
x
தினத்தந்தி 21 Sep 2022 6:45 PM GMT (Updated: 21 Sep 2022 6:45 PM GMT)

தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.19¼ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. நேற்று முன்தினம் 521 கிலோ பட்டுக்கூடுகள் கொண்டு வரப்பட்டது. இந்த பட்டுக்கூடு வரத்து நேற்று அதிகரித்தது. அதன்படி 2,751 கிலோ பட்டுக்கூடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.751-க்கும், குறைந்தபட்சமாக ரூ.601-க்கும், சராசரியாக ரூ.701.81-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.19 லட்சத்து 31 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.


Next Story