பட்டுக்கூடு வரத்து குறைந்தது


பட்டுக்கூடு வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:46 PM GMT)

தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடு வரத்து குறைந்தது.

தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் 2,169 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனிடையே நேற்று பட்டுக்கூடுகள் வரத்து 1,179 கிலோவாக குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.805-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.5 விலை அதிகரித்தது. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.810-க்கும், குறைந்தபட்சமாக ரூ.521-க்கும், சராசரியாக ரூ.705.87-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.8 லட்சத்து 32 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.


Next Story