குருபகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு


குருபகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

குருபகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவாரூர்

நவக்கிரக தலங்களில் ஒன்றாக போற்றப்படும் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர், குருபகவான் கோவிலில் குருவாரத்தையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு கலங்காமற் காத்தவினாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டனர்.இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் குருதெட்சிணாமூர்த்திக்குசிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.


Next Story