சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை


சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 17 Sep 2022 7:00 PM GMT (Updated: 17 Sep 2022 7:00 PM GMT)

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை

திண்டுக்கல்

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் உள்ள பரிவார மூர்த்திகளில் ஒருவராக சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும். அதன்படி தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று பக்தர்களால் வழங்கப்பட்ட சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பால், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதையடுத்து ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா...! கோவிந்தா...! என கோஷமிட்டு வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story