அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி

ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி மாத 2-வது வெள்ளி

தர்மபுரியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சியம்மன் கோவிலில்சாமிக்கு அஷ்ட வராஹி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் பூப்பந்தல் அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில்சாமிக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதேபோல் கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில், உழவர் தெரு மகா மாரியம்மன் கோவில், நெசவாளர் நகர் ஓம் சக்தி மாரியம்மன் கோவில், பாரதிபுரம் மாரியம்மன் கோவில், அன்னசாகரம் சக்தி மாரியம்மன் கோவில், மதிகோன்பாளையம் மாரியம்மன் கோவில், வட்டார வளர்ச்சி காலனி முத்து மாரியம்மன் கோவில், கடைவீதி புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

புற்று நாகர்கோவில்

தர்மபுரி செந்தில் நகரில் உள்ள புற்று நாகர்கோவிலில் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பாம்பு புற்றுக்கு பால், முட்டை வைத்து வழிபட்டனர். இதேபோன்று இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவில், அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பச்சையம்மன் கோவில், கொளகத்தூர் பச்சையம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதேபோன்று காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள அஷ்ட வராஹி அம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஒகேனக்கல் காவிரி அம்மன் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story