இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

தை முதல் வெள்ளிக்கிழமையையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர்

சாத்தூர்,

தை முதல் வெள்ளிக்கிழமையையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சிறப்பு வழிபாடு

சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

பின்னர் அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 2 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

நேர்த்திக்கடன்

பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் பாதுகாப்புக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story