பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கருப்பூர் ராமநாராயண பெருமாள் கோவிலில் சீதாதேவி- லட்சுமணர் சமேத ராம நாராயண பெருமாளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமநாராயண பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெருமாளுக்கு மங்கல ஆரத்தி உள்ளிட்ட உபச்சாரங்கள் நடைபெற்றன. அதுபோல் தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வரதராஜ பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார். பெருமாளுக்கு வேத மந்திரங்கள் முழங்க மங்கல ஆரத்தி, மகா தீபாராதனை நடைபெற்றது. தா.பழூர் பால ஆஞ்சநேயர் கோவிலில் சஞ்சீவிராயர், பால ஆஞ்சநேயருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பால ஆஞ்சநேயர் சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story