பிடாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


பிடாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 4 Oct 2023 6:45 PM GMT (Updated: 4 Oct 2023 6:45 PM GMT)

தலைஞாயிறு அருகே பிடாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறை அடுத்த ஓரடியம்புலத்தில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள வாராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


Next Story